நடிகர் அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அஜர்பைஜானில் படப்பிடிப்பு:
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தம்:
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும்.
அஜித் மகன் பிறந்தநாள்:
கடந்த 2ஆம் தேதி அஜித் அவரது மகன் ஆத்விக் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
வெளிநாட்டு படப்பிடிப்பு:
விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 15ஆம் தேதி வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அஜித் மருத்துவமனையில்:

இந்த சூழலில், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலை இயக்குநர் மரணம்:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்த போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தியிருந்தார்.வருகின்ற 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில்,
உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித்குமார் சென்றுள்ளார்
-செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தகவல்


