இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ், நடிகர் அஜித் குமாருடனான தங்களது புதிய திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘குட் பேட் அசிங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வாழ்க்கையிலும் விலைமதிப்பற்ற தருணங்கள் உள்ளன, இது எனது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. எனது மாட்டினி சிலையான ஏ.கே. சாருடன் பணிபுரிவது நீண்ட நாள் கனவாக இருந்தது, அவருடன் பணிபுரிவதில் நான் உணர்ச்சிவசப்படுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ரவிசங்கர் சாருக்கு நன்றி.
சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் சமீப காலமாக படங்களில் கவனம் செலுத்தாமல் பைக் டூர் செல்வது, காட்டுப் பகுதியில் நண்பர்களுடன் காலத்தை கழிப்பது என வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து வருகிறார்.
தோல்வியை உரமாக்கி தன்னம்பிக்கையை தலைக்கனம் ஆக்கி விடாமுயற்சியுடன் வெற்றியை பற்ற முயலும், இந்த வேங்கை, ஏன் இன்று காட்டுக்குள் அலைகிறது என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு வெற்றி பெற்ற துணிவு படத்திற்கு பின் லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சியில் கூட்டணி சேர்ந்தார் அஜித்.
வேக வேகமாக நடைபெற்று வந்த விடாமுயற்சி ஒளிப்பதிவாளர் மாற்றம், கலை இயக்குனரின் இறப்பு என பல காரணங்களால் ஷூட்டிங் தடைபட்டு போனது என்றும், லைகாவின் நிதி நெருக்கடியால் விடாமுயற்சி சற்று ஒத்தி வைக்கப்பட்டது என்றும் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
இதற்கு அடுத்தபடியாக அஜித் தனது அடுத்த ப்ராஜெக்ட் ஆன மைத்ரி மூவி மேக்கர்ஸ்ன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லியில் கமிட் ஆகி உள்ளார்.
2025 இல் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள அஜித்தின் குட் பேட் அக்லி
அஜித் தனது படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் கூடிய சீக்கிரத்தில் வெளிவந்து விடாமல் ரகசியமாக மெயின்டைன் பண்ணி வருவார். ஆனால் ஏகே63 படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், டைட்டில், ரிலீஸ் தேதி என அனைத்து அப்டேட்ஸும் சுடச்சுட வந்து கொண்டிருந்தது.
அதுமட்டுமின்றி கடந்த மாதம் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் அதற்கான வேலைகளும் தயாராகி உள்ளது. இவ்வளவு விரைவாக அஜித்தின் பட வேலைகள் நடப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதற்கான காரணம் என்னவென்றால் சமீபத்தில் அஜித்திற்கு ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டு ஒரு சிறிய இடைவெளி எடுத்தார். உடல் பரிசோதனையின் போது இது நிகழ்ந்தது என்று மேனேஜர் சுரேஷ் சந்திராவும் தெரிவித்தார்.
ஆனால் அஜித்திற்கு மூளையில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பதாகவும், இதற்கு முன்னர் நடந்த விபத்து காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதற்காக மூன்று மாதம்,தொடர் ஓய்வு எடுக்க சொல்லி குடும்பத்தினர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இது தெரியாமல் விமர்சகர்கள் பலர் அஜித்தை குறை சொல்ல நமது பெயர் டேமேஜ் ஆகும் என்கின்ற நோக்கத்தில்,
ஏற்கனவே தாமதமான விடா முயற்சியை ஓரம் கட்டி வைத்துவிட்டு, ஆதிக் உடன் அடுத்த படத்திற்கு தீவிரம் காட்டி வருகிறார் அஜித். கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்கின்ற திட்டத்தில் இருக்கிறார் அஜித்.
உடல் நிலையில் ஏற்பட்டிருக்கும் தொய்வால் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு, ஆதிக்கின் குட் பேட் அக்லியில் இணைய உள்ளார் அஜித்.
மார்ச் 14 அன்று, தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடக தளமான X இல் டைட்டில் போஸ்டரை வெளியிட்டனர். ரத்தக்கறை படிந்த வெள்ளி முழங்கால் மற்றும் வேலி கம்பி ஆகியவற்றைக் கொண்ட இந்த போஸ்டர், ஜூன் 2024 இல் படம் தொடங்குவதாகவும், 2025 பொங்கல் அன்று வெளியிடுவதாகவும் அறிவித்தது.இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் மைத்ரி இப்படத்தை தயாரிக்கிறார்.
