விடாமுயற்சி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்: அஜித்தின் அடுத்த படத்தின் தகவல்கள்!
சென்னை: லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படமான “குட் பேட் அக்லி” படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கமல்ஹாசனின் “இந்தியன் 2” மற்றும் ரஜினிகாந்தின் “வேட்டையன்” படங்களின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் நடித்து வரும் “விடாமுயற்சி” படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
“புஷ்பா” படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அடுத்ததாக அஜித் குமாரை வைத்து “குட் பேட் அக்லி” படத்தை தயாரிக்க உள்ளது. அந்தப் படத்தை திரிஷா அல்லது நயன்தாரா, பகிரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வெற்றி கிடைக்க மல்டி ஸ்டார் படங்களை தொடர்ந்து செய்து வரும் நிலையில், நடிகர் அஜித் குமாரும் “குட் பேட் அக்லி” படத்தில் ஏகப்பட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் “அனிமல்” படத்தின் வில்லன் பாபி தியோல் உள்ளிட்ட இருவரிடமும் “குட் பேட் அக்லி” படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட் நடிகை ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.
“விடாமுயற்சி” திரைப்படம் ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு ஷூட்டிங் புறப்பட்டால் தான் அந்த படம் ஸ்டார்ட் ஆகும் என்றும் இல்லை என்றால் நடிகர் அஜித் குமார் “குட் பேட் அக்லி” படத்தில் தான் நடிக்க கிளம்பிவிடுவார் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் குட் பேட் அகிலி படத்தின் வில்லனாக பாலிவுட் பிரபலம் வில்லனாக களம் இறங்க உள்ளனர்
Exclusive ‼️ #GoodBadUgly
Final talks between #JohnAbraham & #BobbyDeol to play a Villain role 💥
Whom do You Pick among these two?#Ajithkumar | #AK https://t.co/SrxaaVsQnz pic.twitter.com/PwHM1410IE
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) April 12, 2024
