தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அஜித், ரசிகர்களை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், சமீபத்திய துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் ரசிகர் தொடர்பில் இருக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர் மன்றம் கலைத்தது கலைத்ததுதான். ஆனால், ரசிகர்களுக்கு தேவையானவை, அவர்களுக்கு வேறென்ன உதவிகள் வேண்டும் என்பதை தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு, அதன் மூலம் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யப்போவதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், சீக்கிரம் தல நேரிடையாக களத்தில் இறங்குவார் என்றும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
துணிவு படம் பார்க்க வந்த நேரத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தது அஜித்தை மிகவும் காயப்படுத்தியதாகவும், அதனால் இனிமேலும் ரசிகர்களை பார்க்காமல் இருப்பது தவறு என்றும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்தின் இந்த புதிய முடிவு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
