சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் 10,000 ரூபாய் வீதம் உதவி செய்தார் என்று ஒரு தகவல் பரவியது. இந்த தகவல் உண்மையா என்று பிரபல திரை விமர்சகர் அந்தணன் கூறியுள்ளார்.
அந்தணன் கூறுகையில், “அஜித் ஒரு ரகசியமான நபர். அவர் தனது உதவிகளை வெளிப்படையாக செய்வதில்லை. பொதுவாக, அவர் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நினைத்தால், அதை நேரடியாக முதல்வர் நிதிக்கு கொடுப்பார். அதை அவரோ அவரின் மனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாக செக்காக மட்டுமே கொடுத்துவிடுவார். இல்லை நேரடியாக ஆன்லைனில் மாற்றிவிடுவார்.
“அப்படி இந்த சென்னை வெள்ளத்தில் அஜித் மக்களுக்கு 10,000 ரூபாய் வீதம் உதவி செய்ததாக பரவிய தகவல் உண்மை இல்லை. அது ஒரு பொய்யான தகவல். அப்படி ஒரு தகவலை நீங்கள் பார்த்தால் கூட சிரித்து கொண்டே கடந்து சென்று விடுங்கள்” என்று அவர் கூறினார்.
அஜித்தின் ரசிகர்கள் இந்த தகவலை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அஜித் தனது உதவிகளை வெளிப்படையாக செய்யாமல், ரகசியமாக செய்வது அவரது பண்பு என்று அவர்கள் கூறுகின்றனர்.
