Sunday, February 22, 2026

Bigg Boss 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா இல்ல !ரவிச்சந்திரன் சந்திரசேகரன் ஒரே போடு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் 7 ஆவது சீசன் ரியாலிட்டி ஷோ பெரும் வரவேற்பை பெற்றது. இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.

மாயா, வி.ஜே.அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணிச்சந்திரா, விஷ்ணு ஆகியோர் தலைப்புக்காக போட்டியிடும் இறுதி ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன் வெற்றியாளர் பட்டத்தை விஜே அர்ச்சனா வென்று இருப்பதாக பலரும் கொண்டாடி வந்தனர். கோப்பை மற்றும் ரொக்கப் பரிசைப் பெற்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற வரலாற்றை உருவாக்கி இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டம் அர்ச்சனா வென்றார் என பலரும் கொண்டாடி வரும் நிலையில் அவர் வெல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ரவீச்சந்திரன் சந்திரசேகரன் தனது யூடியூப் விமர்சனத்தில் சொல்லி உள்ளார்.

அதில், “பிக் பாஸ் வின்னர் யார் என்ற தகவல் இன்று தான் தெரிய வரும். ஐந்தாவது இடத்தில் விஷ்ணு. பொதுமான ஆக்சன் பிளாக் இருந்தாலும் அதை காமெடி படமாக மாற்றிவிட்டார்கள். 13 வாரங்கள் ஓடிய படத்தை இந்த வாரத்துடன் முடித்துவிடுகிறார்கள்.

நடன இயக்குநரின் கதையாக இருந்தாலும், மக்கள் மனதை இந்த ஷோ முழுவதும் ஈர்த்தது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணின் மனதையும் கவர்ந்தார். நான்காவது இடத்தில் இருக்கிறார் மணி.

மூன்றாவது இடத்தில் அர்ச்சனா. அம்மன் கோயில்களில் ஏகப்பட்ட அர்ச்சனை செய்யப்பட்டாலும் அவருக்கு மூன்றாவது இடமே.

ஆரம்பத்தில் இருந்து விளையாட்டை விளையாடி மாயா, தினேஷ் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர்” என்றார்.

ஊரே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என கொண்டாடி வரும் நிலையில் அது இல்லை என ரவீச்சந்திரன் சந்திரசேகரன் சொல்லியது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து

“பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி நடத்துகிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடிந்தது. முதலில் மக்கள் வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்தவரை வெற்றிபெற வைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அது இல்லை. ரவீச்சந்திரன் சந்திரசேகரன் சொன்னதுதான் உண்மையாக இருக்கும்” – ரமேஷ்
“அர்ச்சனா தான் வெற்றிபெற வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. ரவீச்சந்திரன் சந்திரசேகரன் சொன்னது உண்மையாக இருந்தால், அது ஏமாற்றம்” – சரண்யா
“இந்த நிகழ்ச்சியில் பணம் மட்டுமே முக்கியம் என்று தெரிந்துக்கொண்டேன். மக்கள் வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்தவரை வெற்றிபெற வைக்காமல், ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கும் நபரை வெற்றிபெற வைக்கிறார்கள்” – ராஜன்
இந்த தகவல் வெளியான பிறகு, பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியின் மீதான ரசிகர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT