டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ரிஷப் பண்ட், 84 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரிஷப் பண்ட் கூறியதாவது:
“டி20 என்பது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. 14 – 15 ஓவர்கள் முடிந்ததும் பந்து நன்றாக வந்தது. எனவே ரசீக் மீது நம்பிக்கையை வைத்தோம். ஒரு போட்டியில் நன்றாக பந்து வீசும் ஒருவரை நாங்கள் எப்போதும் நம்புவோம். அதனாலேயே அவரை 19வது ஓவரில் பயன்படுத்தினேன். இது போன்ற விஷயங்கள் கேப்டனாக உங்களுடைய உள்ளுணர்வில் தோன்றும். அது இன்று வேலை செய்ததில் மகிழ்ச்சி.”
“தொடர்ந்து விளையாடி அவர்களுடைய முதன்மை ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய திட்டம். ஒவ்வொரு நாளும் களத்தில் நான் நன்றாக உணர்கிறேன். மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் முக்கியமானது. நான் களத்தில் இருப்பதை விரும்புகிறேன்.”
“சில நேரங்களில் பவுண்டரி சிக்சர் வருவதற்கு நேரம் எடுக்கும். இன்று என்னுடைய முதல் சிக்சர் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. களத்தில் 100 சதவிகிதம் கொடுக்கவும் விரும்புகிறேன். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்.”
இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
