தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து தமிழ் சினிமாவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவாகரத்துக்கு பின்னால் என்ன காரணம் என்று பலரும் ஊகிக்க தொடங்கியுள்ளனர்.
வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி சில ஷாக் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் பேசியதில் சில முக்கிய தகவல்கள்:
தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா ஒரு இயக்குநராக இருந்தாலும், அந்த காலகட்டத்தில் அவரால் வீட்டு வாடகை கூட கட்ட முடியாத நிலையே இருந்தது.
தனுஷ் ரஜினிகாந்தின் வீட்டிற்கு மருமகனாக மாறும் வரை, அவரது வாழ்க்கை வறுமை மற்றும் கஷ்டங்களால் நிறைந்திருந்தது.
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து ஒரு ஏற்பாடு என்று சிலர் கூறுகின்றனர்.
நேற்று வரை கூட, ஐஸ்வர்யாவும் தனுஷும் போனிலும், வாட்ஸ் அப்பிலும் நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
தனுஷ் தான் வாங்கி இருக்கும் பல கோடி சொத்துக்களை மனைவி ஐஸ்வர்யாவின் பெயரில் இணைத்து தான் வாங்கி இருக்கிறாராம்.
2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருக்கும் “சிச்சுவேஷன் சிப்” என்ற ரிலேஷன்ஷிப் முறையை தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி பின்பற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதன்படி, தன்னுடன் பயணிக்கும் நபர், தன்னுடன் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
ஆனால் ஒரு முறை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், உடனே விலகி விட வேண்டும்.
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தும் இந்த சிச்சுவேஷன்ஷிப் என்ற பெயரிலேயே நடந்திருப்பதாக தனுஷின் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர்களுடைய குழந்தைகளும் இருதரப்பு வீட்டாருக்கும் சகஜம் போல சென்று வருகிறார்களாம்.
அந்த மகன்களுக்கு அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள் என்ற ஒரு நினைப்பே வரவில்லையாம்.
தனுஷ்-ஐஸ்வர்யா காதல் கதை:
தனுஷ் அறிமுகமான புதிதில் அடுத்தடுத்து இரு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன.
இதனால், அவரை பற்றி பலருடைய பார்வையும் மாறியது.
அப்போதுதான், ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் பார்வையும் தனுஷின் மீது விழுந்தது.
தனுஷின் சகோதரியும், ஐஸ்வர்யாவும் தோழிகள்.
அவரை சந்திக்க அடிக்கடி வரும் போது தனுஷ் மீது ஐஸ்வர்யா காதல் வைத்தார்.
ஆரம்பத்தில் தனுஷ் தயங்கினாலும், பின்னர் இருவரும் காதலித்தனர்.
ரஜினி முதலில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
