Tuesday, February 24, 2026

Double ஹீரோ சப்ஜெக்ட் கதையில் அஜித் ! அஜித்திடம் பிரமாண்ட கதையைச் சொல்லப் போகும் பிரபல இயக்குனர் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அன்றிலிருந்து நடிகரின் 62வது படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பல நாடகங்களுக்குப் பிறகு, கடந்த மே மாதம் லைகா புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக ‘ஏகே 62’ என்பது மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’, ரேசி ஆக்‌ஷன் த்ரில்லர் என்று அறிவித்தது.

ஏ.கே.யின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிடத் தயாராகி வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும், லைகா இன்னும் அமைதியாக இருக்கிறது, மேலும் மே 1 ஆம் தேதி ‘விடாமுயற்சி’ அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. லைகாவின் மௌனத்தால் விரக்தியடைந்துள்ள அஜித் ரசிகர்கள், தயாரிப்பு நிறுவனத்திற்காக மிஸ்ஸிங் போஸ்டரை தயார் செய்துள்ளனர்.AK ரசிகர்கள் சிலர், “லைகாவை காணவில்லை. ‘விடா முயற்சி’ தலைப்பு 300 நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. புதுப்பிப்பு எங்கே? கண்டுபிடித்தவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்” (sic) என்று ஒரு போஸ்டரை தயார் செய்திருந்தனர். இந்த போஸ்டரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனிருத்தின் இசையில் த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

விடாமுயற்சி படத்துடைய ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அதில் அஜித், திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு ஷூட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது சென்னையில் படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்துவருவதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட ஷுட்டிங்கிற்கான லொகேஷன் தேடும் பணியும் நடந்துவருகிறது. இந்த சூழலில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதோடு சரி; படத்திலிருந்து வேறு எந்தவிதமான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவந்தது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்தனர்.

மங்காத்தா படத்துக்கு பிறகு அஜித் – திரிஷா – அர்ஜுன் கூட்டணி இதில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். படத்தின் ஷூட்டிங்கின்போது மிலனின் உயிரிழப்பு உள்ளிட்ட சோக சம்பவங்கள் நடந்தாலும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.முதல் ஷெட்யூல் ஓவர்: அஜித் அஜர்பைஜானிலிருந்து சென்னை வந்து மீண்டும் அங்கு சென்று நடித்துக்கொடுத்தார். ஏறத்தாழ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொகேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு காரணம்; எக்கச்சக்க செலவை மகிழ் திருமேனி இழுத்துவிட்டதுதான் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிய காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

அடுத்தது எங்கே: தற்போது படக்குழு சென்னையில் இருக்கிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் துனுஷியாவில் நடக்கலாம் என்றும் தெரிகிறது. அஜர்பைஜானில் சொதப்பியது போல் துனிஷியாவில் சொதப்பக்கூடாது என்று மகிழ் திருமேனியிடம் லைகா தரப்பு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இது ஒருபுறமிருக்க அஜித் ரசிகர்களோ விடாமுயற்சி அப்டேட் கேட்டு போராடவும் செய்தனர். சில நாட்களுக்கு முன்புகூட புதுச்சேரியில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நோ சொல்லும் திரிஷா: நிலைமை இப்படி இருக்க படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விடாமுயற்சி படத்தின் அடுத்த ஷெட்யூல் தொடங்க மேலும் தாமதம் ஆகும் சூழல் நிலவுகிறதாம். இதனால் திரிஷாவுக்கு கால்ஷீட் இடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் கமலுடன் தக் லைஃப் படத்துக்கு தேதி கொடுத்திருக்கிறார். அதுதவிர்த்து சிரஞ்சீவியுடனும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் அவர் விடாமுயற்சி படத்துக்கும் தேதி கொடுத்தார்.

ஆனால் அவர் கொடுத்த தேதிகளுக்கு அவருக்கான போர்ஷனை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. எனவே இப்போதைக்கு தக் லைஃப், விஸ்வம்பரா படத்துக்கான தேதிகள் மட்டுமே திரிஷாவிடம் இருப்பதால்; விடாமுயற்சியின் அடுத்த ஷெட்யூலுக்கு தன்னால் வர முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் அஜித்தே நேரடியாக களமிறங்கி திரிஷாவிடம் பேசியதாகவும்; அதனையடுத்து தக் லைஃப், விஸ்வம்பரா படத்தின் தேதிகளுக்குள் அட்ஜெஸ்ட் செய்து விடாமுயற்சியின் அடுத்த ஷெட்யூலுக்கு அவர் வர ஒத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

சூரரைப்போற்றுஇ இறுதிச்சுற்று போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா. தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கயிருக்கிறார். இந்தப் படத்தை கேஜிஎப் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரித்து இருந்த ஹோம்பேல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இதுகுறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதிலிருந்து இந்தப் படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய பல செய்திகள் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. ஏற்கனவே சுதா கொங்கரா தன்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ நிச்சயம் சூர்யாதான் என்று தெரிவித்திருந்தார்.

சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் இவர்களின் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சுதா கொங்கரா ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்திய கதையை இயக்க இருப்பதாகவும், அந்த சவாலான கதைக்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இந்த படம் ஒரு வரலாற்று நிகழ்வை மையப்படுத்தியும், டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் ஒரு கேரக்டரில் தான் சூர்யா நடிக்கிறார். மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகா் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

கேஜிஎஃப் படத்தின் மூலம் பெரிய அளவில் லாபம் பார்த்த தயாரிப்பு நிறுவனம் தற்போது இந்தத் திரைப்படத்தையும் மிக பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படமும் இந்திய அளவில் பேசப்படும் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காகத்தான் தயாரிப்பு நிறுவனம் தற்போது பக்காவாக பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறது. இந்த கதையில் நடிப்பதற்கு அஜித் சம்மதிப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஏனெனில் அவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனாலும் எப்படியும் அவரை சம்மதிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் தற்போது தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

த்ரிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்குமாருடன் மீண்டும் இணைகிறார், விடாமுயற்ச்சியில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்திடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் படத்தின் பாடல்கள் மற்றும் அசல் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT