Tuesday, February 24, 2026

நீதியைத் தேடி ஒரு மகளின் போராட்டம் ‘ஃபைண்டர்’ படத்தின் விமர்சனம் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஃபஹத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படத்தின் விமர்சனம் இதோ !

‘ரொமாஞ்சம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் ‘ஆவேசம்’ படத்தின்...

RomeoMovieReivew :விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்தின் விமர்சனம் இதோ !

நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் திறமையான மிருணாளினி ரவி நடித்த தமிழ்...

டபுள் டக்கர் விமர்சனம் : தவறான டக்கர், குழப்பமான திரைக்கதை!

டபுள் டக்கர் கதை: முகத்தில் தழும்புடன் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் பணக்கார இளைஞன்...

ஆடு புலி ஆட்டம் ஆடும் ஜி.வி.பிரகாஷ் நடித்த கள்வன் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் இதோ

கள்வன்' திரைப்படத்தின் இயக்குனர் PV ஷங்கர், கொங்கு வட்டார வழக்கு பேச்சுமொழிகளை...
ADVERTISEMENT

படம்: ஃபைண்டர்
நடிகர்கள்: வினோத் ராஜேந்திரன், பல்லவி சுப்பிரமணியம், சார்லி, நிழல்கள் ரவி, சென்ராயன்
இயக்கம்: வினோத் ராஜேந்திரன்
தயாரிப்பு: மீரா கதிர்வேலன்
இசை: சாம் C.S.
வெளியீட்டு தேதி: 2024-04-21

கதை:

ADVERTISEMENT

பழவேற்காட்டில் மீனவராக வாழும் பீட்டர் (சார்லி), எதிர்பாராத பண நெருக்கடியைச் சமாளிக்க, கொலைக்குற்றம் ஒன்றை ஏற்று 8 வருடமாகச் சிறையில் வாடுகிறார்.
பீட்டரின் மகளான ரூபி (பல்லவி சுப்பிரமணியம்), தந்தையை மீட்க, முதுகலையில் குற்றவியல் படித்துவிட்டு ‘ஃபைண்டர்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, முடிக்கப்பட்ட சில வழக்குகளை ‘ரீ ஓபன்’ செய்து, தங்களது விசாரணையின் மூலம் உண்மையைத் தோண்டியெடுக்கும் வினோத் ராஜேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் பல்லவி ஆகியோரை நாடுகிறார்.
பீட்டரின் வழக்கை கையிலெடுக்கும் வினோத் மற்றும் பல்லவி, அவரை மீட்க முடிந்ததா என்பது கதை.
விமர்சனம்:

‘ஃபைண்டர்’ திரைப்படம், தொய்வில்லாத திரைக்கதையின் மூலம் கடைசிவரை விலகல் இல்லாமல் படம் பார்க்க வைத்துவிடுகிறது.
எழுதி இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் ராஜேந்திரன், தனது நடிப்பு மற்றும் இயக்கத்தின் மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
அரசு வழக்கறிஞராக வந்து, குற்றவியல் படிக்கும் மாணவர்களுக்கு நிழல்கள் ரவி ‘கெஸ்ட் லெக்சர்’ எடுக்கும் ஆரம்பக் காட்சியே அசத்தல்.
‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துவிடலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்ற நியதி, நீதித்துறையின் அடித்தளங்களில் ஒன்று என்பதையே நோக்கமாக வைத்து, ‘ஃபைண்டர்’ நிறுவனத்தைத் தொடங்குவது, சரியான வழக்கை வினோத் மற்றும் பல்லவி தேர்வு செய்வது என நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம்.
சிறையில் இருக்கும் பீட்டரின் வாழ்க்கை, திரைக்கதையின் ஆன்மாவாக இருப்பதால், அவரது வாழ்க்கை எவ்வாறு சிதைவுக்கு உள்ளானது, குடிமைப் பணித் தேர்வு எழுத விரும்பிய அவர் மகள், கழிக்கப்பட்ட மீன்களை விற்றுப் பிழைத்து வாழ வேண்டிய நிலையிலும் தனது தந்தையை ஏன் மீட்க நினைக்கிறார் ஆகியவற்றை உயிர்த்துடிப்புடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒரு கொலைக் குற்றத்தின் பின்னால் இருக்கும் இழிநிலை மனிதர்கள், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சித்தரித்த விதம் பாராட்டும் விதமாக இருப்பதுடன், அவை வினோத் – பல்லவி விசாரணையின் வழியாக திரைக்கதையில் வெளிப்படுவது ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறது.
பீட்டராக சார்லியின் அபாரமான நடிப்பு,

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT