உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு என்னற்ற ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .
ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்கள் வீரர்களை எந்த அளவிற்கு கண்டு ரசிக்கிறார்களோ அதே அளவிக்ரு ஒவ்வவாறு போட்டியிலும் இந்த 4 பெண்களின் பெயர்களும் அடிபடாமல் இருக்காது. ஏனென்றால், இந்த 4 பெண்களின் அணிகள் வெற்றி தோல்வி அடையும்போது இவர்கள் கொடுக்கும் ரியாகஷ்ன் தவறாமல் டிரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும்.
ஷில்பா ஷெட்டி:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரரான ஷில்பா ஷெட்டி, அந்த அணிக்கு சப்போர்ட் செய்ய மைதானத்துக்கு தவறாமல் வந்துவிடுவார். சிக்சர், பவுண்டரி அடிக்கும்போதெல்லாம் துள்ளிக் குதிக்கும் அவர், ரசிகர்களையும் கைதட்டி உற்சாகப்படுத்துமாறு அடிக்கடி கூச்சலிடுவார். ஸ்கிரீனில் இவர் வரும்போதெல்லாம், மைதானம் கலைக்கட்டிவிடும்.
நீட்டா அம்பானி :
இவர் இல்லாமல் மும்பை அணி இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இவர் இல்லாமல் மும்பை வீரர்கள் மைதானத்திற்குள் காலெடுத்து வைக்க மாட்டார்கள் . இக்கட்டான சமயங்களில் கைகூப்பி சாமி கும்பிடத் தொடங்கிவிடுவார். மும்பை வெற்றிபெற்றுவிட்டால், நீட்டா அம்பானியின் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்லவே முடியாது.
ப்ரீத்தி ஜிந்தா:
ஐபிஎல் தொடங்கிய நாள் முதல் , அணி உரிமையாளர்களில் பிரபலமானவர் ப்ரீத்தி ஜிந்தா. பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிட்டால் துள்ளி குதிக்கும் இவர் வீரர்களை ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் . தோல்வியை தழுவும்போது சோகத்தின் உட்சத்துக்கே சென்றுவிடுவார் பாவம் .
காவ்யா மாறன்:
சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான இவர் கடந்த சில ஆண்டுகளாக லேட்டஸ்ட் டிரெண்டில் தவறாமல் இடம்பிடித்துள்ளார் . எக்ஸ்பிரசன் குயீன் எனும் அழைக்கப்படும் இவர் ஒவ்வொரு பந்துக்கும் அவருடைய எகஸ்பிரசனை நம்ம கேமராமேன் அண்ணன் தவறாமல் ஃபோக்கஸ் செய்துவிடுவார்.