லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் கையெழுத்திட்ட பட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, லைகா புரொடக்ஷன்ஸ் இந்த திட்டத்தை தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் மத நல்லிணக்கத்தைப் பற்றியது என்பதை உணர்த்துகிறது. விஷ்ணு விஷால் தனது மத அடையாளத்தால் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லீம் கிராமவாசியாக நடிக்கிறார்.இரண்டு நடிகர்களைத் தவிர, தான்யா பாலகிருஷ்ணன், செந்தில், ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் இப்படத்தின் மற்ற நடிகர்கள் ஒரு பகுதியாக உள்ளனர், இது பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில், டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கத்தில் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் ஐதராபாத்தில் இருக்கிறார். அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும். சூப்பர்ஸ்டார் லோகேஷ் கனகராஜுடன் இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு இணைவார். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். மகளுக்காக ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆக்ஷன் ஜானரில் கமர்சியல் மூவியாக உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.லால் சலாம் முதல் விமர்சனம்: ஜெயிலரை தொடர்ந்து லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள லால் சலாம் படத்துக்கு முதல் விமர்சனமே பாசிட்டிவாக கிடைத்துள்ளது.சிறிய கிராமத்தை கதைகளமாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம் படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கிரிக்கெட் போட்டியில் அடிக்கடி நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றனர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கே சிலர் மத அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர். இவர்கள் பிரச்சினையை வைத்து அந்த ஊரில் நடக்கும் தேர்த் திருவிழாவில் கலவரத்தை நடத்தவும் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த கிராமம் முழுவதும் மத ரீதியாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்கிறது.
இதனையறிந்து மும்பையில் டானாக வலம் வரும் மொய்தீன் பாய், தனது சொந்த ஊருக்கு வந்து எல்லா பிரச்சினைகளையும் சரி செய்கிறார். ஆரம்பத்தில் சமாதானமாக பேசிப் பார்க்கும் மொய்தீன் பாய் பின்னர் பாட்ஷா ஸ்டைலில் ஆக்ஷனில் வில்லன்களை துரத்தி அடிக்கிறார். அதன் பின்னர் அந்த கிராம மக்கள் எப்படி மதங்களை கடந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பது தான் லால் சலாம் படத்தின் கதையாம்.
முதல் பாதியில் பெரிதாக கவனம் ஈர்க்காத லால் சலாம், இரண்டாம் பாதியில் ரஜினியின் வருகைக்குப் பின்னர் அதகளமாக இருக்கிறதாம். முதல் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே ரஜினியின் போர்ஷன் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் 45 நிமிடங்களுக்கும் அதிகமாகவே ரஜினியின் காட்சிகள் இருக்கின்றன. இதனால் இரண்டாம் பாதியில் மொய்தீன் பாய் சாம்ராஜ்யம் தான் பட்டாசாக தெறிக்குதாம்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக வந்துள்ளதாம். சில காட்சிகளில் கிரிக்கெட் போட்டியை லைவாக பார்த்த அனுபவம் கிடைக்கும் என முதல் விமர்சனத்தில் இருந்து தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மேக்கிங், வசனங்கள் லால் சலாம் படத்துக்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளதாம்.
அதேபோல் பாடல்களில் சொதப்பிவிட்ட ஏஆர் ரஹ்மான், பின்னணி இசையில் மிரட்டியுள்ளாராம். முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏஆர் ரஹ்மான் போட்டுள்ள பிஜிஎம் ஒவ்வொன்றும் தியேட்டரில் விசில் பறக்கும் என சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக லால் சலாம் பக்கா கமர்சியல் ஜானரில் ரஜினி ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் லால் சலாம் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பான வசூல் கிடைக்கும் என படக்குழு நம்பிக்கையோடு காத்திருக்கிறது.
திரைப்பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் உலகம் முழுவதும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். வரவிருக்கும் படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார், டிரெய்லர் மற்றும் கதையின் நடவடிக்கைகளில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதைக் காட்டும் விளம்பரப் பொருள். லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் குறுகிய காலத்திற்கு மட்டும் எப்படித் தோன்றவில்லை என்பதை விளக்கும் விக்ராந்த்
