சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தற்போது அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரசிகர்களிடையே கவலை அலைகளை கிளப்பியுள்ளது.
ரஜினியின் சினிமா வாழ்க்கை:
ரஜினிகாந்த் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியை அலங்கரித்து வருகிறார்.
இடையில் அவர் தோல்விகளை சந்தித்தாலும், சந்திரமுகி பட விழாவில் அவர் சொன்னதுபோல், விழுந்தால் குதிரை போல் சட்டென்று எழுந்துவிடும் வழக்கம் உடையவர்.
அப்படித்தான் அவருக்கு அமைந்தது ஜெயிலர் படம்.
தற்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகிறது.
படத்தின் பெயர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.
குடும்ப சிக்கல்கள்:
தனது கரியரில் எத்தனையோ சிக்கல்களை சந்தித்த ரஜினிகாந்த்துக்கு குடும்பத்திலும் சிக்கல் எழத்தான் செய்தது.
இளைய மகள் சௌந்தர்யா முதல் கணவரை பிரிந்தார். அந்த சம்பவம் ரஜினிக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தாலும் இரண்டாவது திருமணம் செய்து வைத்து அந்த சங்கடத்தை தீர்த்துக்கொண்டார்.
ஆனால் பெரும் சங்கடமாக மாறியிருப்பது மூத்த மகள் ஐஸ்வர்யா விவாகாரம்தான்.
தனுஷுடன் பிரிவு:
கிட்டத்தட்ட 20 வருடங்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ்ந்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் டீன் ஏஜில் இருக்கிறார்கள்.
தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்துக்கு விண்ணப்பத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாகவே அவர்களை சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்ததாகவும், ரஜினி தலையிட்டும் அவர்களை சேர்த்து வைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ரஜினி ரொம்பவே அப்செட் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
பத்திரிகையாளர் அந்தணன் சொன்னது:
பத்திரிகையாளர் அந்தணன் ரஜினி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில்,
ரஜினிகாந்த்துக்கு எப்போதெல்லாம் குழப்பமான மனநிலை வருகிறதோ அப்போதெல்லாம் பாலசந்தரிடம்தான் ஆலோசனை கேட்பார்.
ஒருமுறை ஐஸ்வர்யாவால் பிரச்னை ஒன்று ரஜினிக்கு வந்தது. அந்த சமயத்தில் கே.பாலசந்தரிடம் நடந்ததை சொன்னார்.
அதற்கு பாலசந்தரோ நேராக சிஎம்முக்கு ஃபோன் பண்ணு (அப்போது ஜெயலலிதா முதலமைச்சர்) என்று சொன்னார்.
ரஜினி ஜெயலலிதாவிடம் பேசுவதற்கு தயங்கியபோது, பாலசந்தரோ, “உனக்கு பொண்ணு முக்கியமா இல்லை கௌரவம் முக்கியமா?” என்று கேட்டார்.
