ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தங்களுடைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளை பெற்றது.
கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி:
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் விளையாடிய ஆர்சிபி அணிக்கு முக்கியமான கட்டத்தில் விராட் கோலி ஆட்டம் இழந்தார்.
ஆனால், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் விளாசி மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
கேப்டன் டுபிளசிஸ் பாராட்டு:
வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் டுபிளசிஸ், “இது போன்ற போட்டிகளை சீசன் தொடக்கத்தில் விளையாடி வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.
இறுதி கட்டத்தில் எங்களுடைய வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.
தினேஷ் கார்த்திக் இப்படி விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத் தருவார் என்று தோன்றுகிறது.
ஒரு அணி வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பேட்டிங் வரிசையில் நம்பர் 7 மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கும் வீரர்கள் கையில் தான் இருக்கிறது.
அந்த வகையில் தினேஷ் கார்த்திக் எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்.
சின்னசாமி மைதானத்தில் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது.
கோலி இரண்டு மாதம் ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருந்தாலும், அவர் அதே போல் தான் இருக்கிறார்.
அவருடைய இந்த ஓய்வு நிச்சயம் அவருக்கு நல்ல பையனை கொடுத்திருக்கும் என நினைக்கின்றேன்” என்று டுபிளசிஸ் கூறியுள்ளார்.
