மதுரை: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமண வரவேற்பில், மணமகன் கார்த்திக் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் உதட்டில் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
“நான் என் அக்காவிற்கு (மாமியார்) கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போனேன். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக திரும்பியதால் உதட்டில் முத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் ப்ளான் பண்ணி உதட்டில் முத்தம் கொடுத்து நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை,” என்று கார்த்திக் கூறியுள்ளார்.
இந்த விளக்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சர்ச்சைக்கு காரணம்:
திருமண வரவேற்பில், கார்த்திக் மற்றும் பிரியங்கா மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கார்த்திக் திடீரென பிரியங்காவின் உதட்டில் முத்தம் கொடுத்தார். இதை கண்ட ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் கடும் விமர்சனம் எழுப்பினர்.
பலர் கேள்வி எழுப்பினர்:
மாமியாருக்கும் மருமகன் உதட்டில் முத்தம் கொடுப்பது எந்த கலாச்சாரம் என்று பலர் கேள்வி எழுப்பி திட்டி வந்தனர்.
இந்த சம்பவம் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
