மனித உடலில் கல்லீரல் மிகப்பெரிய உறுப்பாகும். நமது உடலின் பிற உறுப்புக்கள் நன்கு செயல்பட இந்த கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
கல்லீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உடலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரலில் பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால், ஒவ்வொருவரும் தங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கல்லீரலில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை உடனே கவனித்து சிகிச்சை பெற வேண்டும்.
கல்லீரலில் பிரச்சனை இருப்பதை எப்படி அறிவது என்று கேட்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். கீழே காணப்படும் 5 அறிகுறிகளை வைத்து காலையிலேயே உங்கள் கல்லீரலில் பிரச்சனை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1. உடல் சோர்வு:
மிகுந்த உடல் சோர்வு, பலவீனம், ஆற்றல் இல்லாமை போன்ற அறிகுறிகளை ஒருவர் காலை அல்லது பகல் வேளையில் அதிகம் சந்தித்தால், அது கல்லீரல் நோயின் முதன்மையான அறிகுறியாகும்.
எந்த வேலையும் செய்யாமல் நல்ல ஓய்வு எடுத்த பின்னரும், ஒருவர் இப்படி உடல் சோர்வை சந்தித்தால், கல்லீரலில் ஏதோ கோளாறு உள்ளது என்று அர்த்தம்.
இந்நிலையில், உடனே மருத்துவரை அணுகி உடலை பரிசோதிக்க வேண்டும்.
2. அடிவயிற்றில் அசௌகரியம்:
அடிவயிற்று பகுதியில் வலி, உப்புசம், வயிறு நிரம்பிய உணர்வு போன்றவற்றை அனுபவித்தால், அது கல்லீரல் நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறியாகும்.
நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்று வலி மற்றும் அசௌகரியம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும்.
எனவே இப்படியான அசௌகரியத்தை ஒருவர் நீண்ட நாட்களாக அனுபவித்து வந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
3. மஞ்சள் காமாலை:
கல்லீரலில் பிரச்சனை இருந்தால் வெளிப்படும் ஒரு முக்கியமான அறிகுறி தான் மஞ்சள் காமாலை.
இந்த மஞ்சள் காமாலை இருந்தால், கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் வெளிப்படத் தொடங்கும்.
இப்படி மஞ்சள் நிறத்தில் தெரிய காரணம், இரத்தத்தில் பிலிரூபின் அதிகமாக இருப்பது தான்.
எனவே உஷாராக இருங்கள்.
4. விவரிக்க முடியாத எடை இழப்பு:
திடீரென்று உடல் எடையில் மாற்றம் தெரிகிறதா? அதுவும் காரணம் ஏதும் இல்லாமல் உங்கள் எடை பெருமளவு குறைந்திருப்பதை காண்கிறீர்களா?
அப்படியானால் அது கல்லீரல் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும்.
