Tuesday, February 24, 2026

கைவிட்ட சிம்பு கையில் எடுத்த பிரதீப் ரங்கநாதன் !சீக்ரெட் சொன்ன இயக்குநர்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். தன்னுடைய எளிமையான நடிப்பு, டயலாக் டெலிவிரி மற்றும் கதாபாத்திர தேர்வுகளால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் “எல்ஐசி” (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக, “ஓ மை கடவுளே” படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ADVERTISEMENT

பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய பயணத்தை குறும்பட இயக்குநராக தொடங்கினார். “கோமாளி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தன்னுடைய குறும்படத்தை வளர்த்து “லவ் டுடே” படத்தை இயக்கினார். இந்த படம் 2022-ல் வெளியாகி வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இளைஞர்கள், குறிப்பாக 2K கிட்ஸ் மத்தியில் இந்த படம் மிகவும் பிரபலமானது. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

“லவ் டுடே” படத்தின் வெற்றிக்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பாராட்டு பெற்றார். ரஜினி படத்தை நேரில் பார்த்து பாராட்டி, சால்வை அணிவித்தார். மேலும், பிரதீப் ரங்கநாதனிடம் தன்னுக்காக ஒரு கதை எழுத சொன்னதாகவும் தகவல் பரவியது.

“எல்ஐசி” படத்திற்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் “ஓ மை கடவுளே” படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தச் சூழலில், அஸ்வத் – பிரதீப் இணைந்திருக்கும் படத்தின் கதை ஏற்கனவே சிம்புவுக்கு சொல்லப்பட்டதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அஸ்வத் மாரிமுத்து, “சிம்புவுக்கு நான் சொன்ன கதை வேறு. பிரதீப்புக்கு சொன்ன கதை வேறு. பிரதீப் ஆண்டனியை வைத்து இயக்கும் இந்தப் படத்தின் கதை சென்னையை பின்புலமாக கொண்டு நகரும். இந்தக் கதை முழுக்க முழுக்க பிரதிப் ஆண்டனியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதைதான்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய எளிமையான நடிப்பு மற்றும் திறமையான கதை தேர்வுகளால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT