தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, புத்தாண்டை பின்லாந்தில் உற்சாகத்துடன் கொண்டாடினர். உறைந்து கிடக்கும் பனியில் இருவரும் விளையாடி மகிழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பீரியட் மற்றும் தற்காலத்தில் நடைபெறும் காட்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக பீரியட் தொடர்பான காட்சிகளில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் கெட்அப் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
ஜோதிகா சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான காதல் தி கோர் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், புத்தாண்டை கொண்டாட சூர்யாவும், ஜோதிகாவும் பின்லாந்துக்குச் சென்றனர். அங்கு உறைந்து கிடக்கும் பனியில் இருவரும் விளையாடி மகிழும் காட்சிகளை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சூர்யா – ஜோதிகா இருவரும் சினிமா துறையில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களின் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Cute Couple Of Kollywood #Suriya #Jyothika #Surya #Jothika #Jyotika#Kanguva2ndLook pic.twitter.com/zPGJ0Wx9DN
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) January 29, 2024
