தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. ஜெயிலர் படத்தை அடுத்து சுந்தர்.சி. இயக்கத்தில் உருவான அரண்மனை-4 படத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா இந்த ஆண்டில் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், சமீபகாலமாக அவ்வப்போது ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் தமன்னா தற்போது கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று குடும்பத்தோடு வழிபாடு செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள தமன்னா, “எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
காமாக்யா கோயில், கவுஹாத்தி நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான இந்து கோயில். இந்தக் கோயிலில் பார்வதி தேவியின் உருவம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது.
தமன்னா தனது பெற்றோருடன் காமாக்யா கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
