Friday, February 20, 2026

நடிகை தமன்னா மீது ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கு ! போலீஸார் முன் ஆஜராக உத்தரவு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிரபல நடிகை தமன்னா மீது ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கு பாய்ந்துள்ளது. இதையடுத்து, அவர் சைபர் கிரைம் போலீஸார் முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. #TamannaahBhatia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ADVERTISEMENT

தமன்னா மீதான குற்றச்சாட்டு:

ஃபேர் பிளே ஆப் மூலம் சட்டவிரோதமாக ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்த மோசடி வழக்கில் நடிகை தமன்னா ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சைபர் ஐடி விங் தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னா விளக்கம் அளிக்க சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமன்னாவின் பதிலளிப்பு:

இதுவரை இந்த விவகாரம் குறித்து தமன்னா தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.

தமிழ் சினிமாவில் தமன்னா:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அடுத்த வாரம் ‘அரண்மனை 4’:

தமன்னா நடிப்பில் உருவான ‘அரண்மனை 4’ திரைப்படம் வரும் மே 3ம் தேதி வெளியாக உள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த மோசடி வழக்கில் தமன்னாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT