வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால் துவங்கப்படாமல் உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கூட்டணி பட்ஜெட் மற்றும் சிம்புவின் சம்பளப் பிரச்னை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய விருது வென்ற இயக்குனருடன் இணையும் சிம்பு!
இந்நிலையில், சிம்பு தனது அடுத்த படம் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவிருந்த ‘எஸ்டிஆர் 49’ படத்தின் பணிகளை உடனடியாகத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், ‘பார்க்கிங்’ படம் மூன்று தேசிய விருதுகளை (சிறந்த தமிழ்ப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர்) வென்றது. இதனால், ராம்குமார் பாலகிருஷ்ணன் – சிம்பு கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிம்புவின் இந்த முடிவு, வெற்றிமாறனின் படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், தேசிய விருது வென்ற இயக்குனருடன் அவர் இணைவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
