Tuesday, February 17, 2026

அஜித்திற்கு போன் செய்த விஜய் ! அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை !என்ன மனுஷன் யா அஜித் ! இதை தான் பேசினார்களா?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி தற்போது அதன் படப்பிடிப்பு செயல்பாட்டில் உள்ளது, குழு சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தங்கள் முதல் ஷெட்யூலை முடித்துள்ளது. சமீபத்தில், விடாமுயற்சி, அஜித் மற்றும் த்ரிஷா முன்னணி நடிகர்கள் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

அஜீத் ஃபேஷன் கேமில் ஆர்வம் காட்டினார், ஸ்டைலான அதே சமயம் எளிமையாகத் தோற்றமளிக்கும் வகையில் அவரது லோ-கீ பர்பிள் டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ். நல்ல மதுவைப் போல வயதானதைப் பற்றி பேசுங்கள்! த்ரிஷா ஒரு பாரம்பரிய எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லைட்-கோல்டன் சுரிதார் அணிந்திருந்தார், சிறிய நகைகள் மற்றும் அணிகலன்கள்

ADVERTISEMENT

நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கினார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு விஜய்யின் இந்த அதிரடி முடிவு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்தச் சூழலில் அஜித்திற்கு விஜய் ஃபோன் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்ததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார். அதேசமயம் நலத்திட்ட உதவிகள் செய்வதை விஜய் மக்கள் இயக்கம் நிறுத்தவில்லை. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது.

அரசியல் என்ட்ரி: இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு நோ: கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடவே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக பெரும்பாலானோர் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்கு நோ: விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்குவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவதை அவ்வளவாக விரும்பவில்லை. சிறந்த எண்ட்டெர்டெயினர் விஜய். அதற்குள் அவரது ERA முடிந்துவிட்டதா என்று நம்ப முடியாமல் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.

அஜித்தின் வாழ்த்து: சூழல் இப்படி இருக்க விஜய்யின் அரசியல் வருகை குறித்து அரசியலுக்கு வராத அஜித்தின் கருத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலரிடம் இருந்தது.

விஜய் செய்த ஃபோன்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அஜித்துக்கு விஜய் ஃபோன் செய்திருக்கிறாராம். அந்த ஃபோனில் தனக்கு வாழ்த்து சொன்னதற்காக விஜய் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டாராம். அந்த சமயத்தில் விஜய்க்கு சில அட்வைஸ்களையும் அஜித் கூறியதாக பேச்சு எழுந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய்க்குஅஜித் ஆதரவு தெரிவித்தால் செமயா இருக்குமே என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஒரு படத்தில் நடிக்கும் அவர் அதோடு சினிமாவிலிருந்து ஒதுங்குகிறார். அந்தப் படத்தை அநேகமாக வெற்றிமாறன் இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அது சமூக அக்கறை கொண்ட கதையாக உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

த்ரிஷாவிற்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் முன்னால் உள்ளது, ஒன்றன் பின் ஒன்றாக மிகப்பெரிய திட்டங்களுடன். விடாமுயற்சி தவிர, பொன்னியின் செல்வன் நடிகை மெகாஸ்டார் சிரஞ்சீவியின் விஸ்வம்பர, மணிரத்னத்துடன் கமல்ஹாசனின் குண்டர் வாழ்க்கை மற்றும் மோகன்லாலின் மலையாளத் திரைப்படமான ராம் ஆகியவற்றிலும் நடிக்கவுள்ளார். நடிகை பவன் குமார் இயக்கிய த்வித்வா என்ற கன்னட படத்திலும், சதுரங்க வேட்டை என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக சதுரங்க வேட்டை 2 படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT