Tuesday, February 24, 2026

விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேச்சு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரண்டரை மாதங்கள் கழித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று (ஜனவரி 19) சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார்.

தனது பேச்சில், விஜய பிரபாகரன் கூறியதாவது:

ADVERTISEMENT

“சின்ன வயதில் இருந்தே, நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட, அப்பாவின் முகத்தை தான் நிறைய முறை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்பா என்றால் நான் மிகவும் எமோஷனல் ஆகிவிடுவேன். கேப்டன் எங்கேயும் போகாமல் நம்முடன் தான் இருக்கிறார்.

அவர் இறந்ததில் இருந்து எந்த மீடியாவிலும் பேசவில்லை. இது தான் முதல் முறை. எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் நானும், சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இது தான். அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான்.

சிறு வயதில் இருந்தே அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ தான் அப்பா சொல்லி கொடுத்து இருக்கிறார். அவர் இல்லாமல் என்ன நடக்கும் என அனைவரும் யோசிப்பீர்கள். உங்களுக்காக தான் எங்களை விட்டு சென்று இருக்கிறார். அவரின் கனவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

கடந்த 10 வருடமாக கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருந்தார். வேறு யாராக இருந்தாலும் அதை தாங்கி இருப்பார்களா என தெரியவில்லை. இந்த 71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்று இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் மன தைரியம் மட்டுமே காரணம்.

யூடியூப் சேனல்களில் அப்பா இறப்பதற்கு முன்பு அவருக்கு நினைவு இல்லை என நிறைய தவறாக சொல்லப்பட்டது. அவர் இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடி கூட வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச படங்களின் பாட்டை போட சொல்லி கேட்டு ரசித்து இருக்கிறார். அவர்கள் சொன்ன பிறகு தான் எனக்கு தெரிந்தது. சிசிடிவி பார்க்கும் போது தான், அப்பா அந்த பாட்டை கேட்டு ரசித்து தாளம் போட்டது தெரிந்தது.

டிசம்பர் 26 ஆம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். வந்து விடுவார் என நினைத்தோம். ஆனால், அவர் நம்முடன் இல்லை. அப்பாவின் மறைவுக்கு வந்த அனைவருக்கும், இந்த நிகழ்வை நடத்தும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

விஜய பிரபாகரனின் பேச்சில், அவரது தந்தையுடனான தனது பாசத்தை வெளிப்படுத்தியதோடு, அவரது மறைவுக்கு பின்னரும் அவரது கொள்கைகளையொட்டி வாழ இருப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில், கமல்ஹாசன், சரத்குமார், ராதாரவி, நாசர், விக்ரம், கார்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயம் ரவி, சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT