தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோர் தனியார் சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இசையில் பல சாதனைகளைப் படைத்து ஆஸ்கர் விருதையும் பெற்ற ஏ.ஆர். ரஹ்மான், இந்தியாவின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் பிரபுதேவா (ரசிகர்களால் செல்லமாக இந்தியன் மைக்கல் ஜாக்சன்) உடன் இணைந்து பேட்டி அளித்தனர்.
அதன்படி, இந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. பெண்களுக்கான ஐபிஎல் கோப்பையை RCB அணி வென்றதும், CSK அணியின் தலைவர் மாற்றப்பட்டதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், STAR SPORTS தமிழ் ஐபிஎல் தொடக்க விழாவை ஒழுங்கு செய்தது. இதில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
பிரபுதேவா, “ஏ.ஆர். ரஹ்மான் சார் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டாரு பாத்தீங்களா?” என்று கேள்வி எழுப்பியதற்கு, “ஆமா, நான் பார்த்த ரெண்டு, மூணு பாடல்கள் நல்லா இருந்துச்சு. ரொம்ப கியூட்டா ஆடினாரு,” என்று பதிலளித்தார். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான், “ஐயோ, என்னால டான்ஸ் ஆட முடியாது,” என்று நக்கலாக பதிலளித்தார்.
இவ்வாறு இருவரும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், “இம்முறைக்கான ஐபிஎல் தொடரை STAR SPORTS தமிழில் பாருங்கள்,” என்று ரசிகர்களுக்கு அழைப்பும் விடுத்தனர்.
