தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி ஹீரோவாக வளர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் முதன்முதலில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என்றும் பலரால் கணிக்கப்பட்டார்.
அதற்கேற்றபடிதான் விஜய் சேதுபதியின் கிராஃப்பும் இருந்தது. அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும் ஆகிய படங்கள் வரிசையாக மெகா ஹிட்டாகின. இதனால் அத்தனை வருட உழைப்புக்கும் சேர்த்து வெற்றிகளை சுவைத்தார் சேது. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பு, டயலாக் டெலிவரி என அனைத்தையும் மாற்றி தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.
இடையில் சில சறுக்கல்களை சந்தித்த விஜய் சேதுபதி கதை என்ன கேட்டாலும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்ற நிலைக்கு நகர்ந்தார். பொதுவாக ஒருவர் ஹீரோவாக ஹிட் கொடுத்துவிட்டால் அந்த இடத்திலிருந்து நகர மறுப்பார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ அப்படி இல்லை. ஹீரோவாக பீக்கில் இருந்தபோதே பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாகவும் கலக்கினார்.
அதேபோல் தமிழில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி ஹிந்தியிலும் நுழைந்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த ஜவான் படத்தில் வில்லனாகவும் நடித்தார். மேலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகர் படத்திலும் நடித்தார். அவரது நடிப்பில் கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையே பெற்றது. தமிழில் ட்ரெய்ன், மகாராஜா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.
விஜய் சேதுபதியின் சிறப்புகள்
எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக கச்சிதமாக நடிப்பதில் வல்லவர்.
தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான எந்த மாற்றத்தையும் உடனடியாக செய்து கொள்வதில் வல்லவர்.
எந்த வகையான படத்திலும் நடிக்க தயங்காதவர்.
நல்ல மனிதர் என்று பெயர் பெற்றவர்.
விஜய் சேதுபதியின் எதிர்காலம்
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது நடிப்பில் வரும் அனைத்து படங்களும் வெற்றி பெறுகின்றன. தற்போது அவர் ட்ரெய்ன், மகாராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை இரண்டுமே முக்கியமான படங்கள். இந்த படங்கள் வெற்றி பெற்றால் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை மேலும் தொடரும்.
டி.சிவாவின் பேச்சு
விழாவில் பேசிய டி.சிவா, “தமிழ் சினிமாவில் ஹீரோக்கான இலக்கணத்தை உடைத்தவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். தன்னுடைய எளிமை பண்பால் இவ்வளவு தூரம் உயர்ந்து நிற்கிறார். தங்களுடைய பட புரோமோஷனுக்கு அந்த ஹீரோக்களை போராட்டி அழைத்து வர வேண்டிய சூழலில் இவ்வளவு பிஸியான ஷெட்யூலிலும் அடுத்த பட ப்ரோமோஷனுக்காக விஜய் சேதுபதி வந்து இருக்கிறார். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”
